Photobucket

Sunday 23 December 2012

உங்கள் நிர்வாண புகைப்படத்தை யாருக்காவது அனுப்பி இருக்கின்றீர்களா?



மேல்குல நாடுகளில் வேடிக்கைக்கும், விநோதங்களுக்கும் பஞ்சமேயில்லை. அந்த வகையில் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வில்லங்கமான சிந்தனையின் பயனாக ஒரு கருத்துக் கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
அதாவது நீங்கள் யாருக்காவது உங்கள் நிர்வாண புகைப்படத்தை அனுப்பி இருக்கின்றீர்களா? இது நாம் உங்களை கேட்டு இருக்கின்ற கேள்வி அல்ல. அமெரிக்காவின் ஏ.பி.சி தொலைக்காட்சி அலைவரிசையில் நேரடியாக சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட வேடிக்கை, விநோத நிகழ்ச்சி ஒன்றின் பெயர்.
இக்கேள்வியை எழுந்தமானமாக ஆண்கள், பெண்கள் பலரிடமும் கேட்டு இருந்தார்கள். சிலர் ஆம் என்றார்கள். சிலர் இல்லை என்றார்கள். இது இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

Thursday 20 December 2012

500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் உடல் உருக்குலையாத நிலையில் கண்டுபிடிப்பு!


அர்ஜென்டீனா Llullaillaco என்ற மலைப்பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டெடுத்த ஆய்வாளர்களுக்கு குறித்த சிறுமியின் உடல் அதிர்ச்சி தரும் விடயமாக காணப்பட்டது. இவ்வுடல் மம்மி போன்று பதப்படுத்தப் படவில்லை..
ஆனாலும் தோல் இதயம் நுரையீரல் போன்ற தசைகள் உருக்குலையாது இன்னமும் காணப்படுகின்றன. மதரீதியாக உடலை பாதுகாக்க எதோவொரு நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. இன்கா (inca) எனும் இனத்தவர்கள் கடவுளின் கட்டளைப்படி சிறுவயதில் இறப்பவர்களை மீளாத உறக்கத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இதன் போது இறந்த உடலானது இருந்த நிலையில் உறக்கத்திற்கு தயார் செய்யப்படுகிறது.
இவர்களின் நடைமுறை எகிப்திய மம்மிகளின் உருவாக்கத்தில் இருந்து வேறுபட்டது. இப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பின்னர் இங்கு வாழ்ந்து அழிவடைந்த இன்கா இன மக்களின் வரலாறு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
lanka sri news tamilwin
free tamil friends chat room
indian tamil friends news chat movies
manithan.com retham.com

Monday 17 December 2012

பூமியை தாக்க வருகிறது விண்கல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை



நாம் வாழும் பூமியை விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூரியனை பல்வேறு குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்று வட்ட பாதையை விட்டு விலகும் பட்சத்தில் பூமியின் மீது தாக்கும் அபாயம் உள்ளது. இவற்றை விண்கற்கள் என அழைக்கிறோம்.
பூமியை நோக்கி வரும் பெரும்பாலான விண்கற்கள் புவிஈர்ப்பு விசை காரணமாக எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இவ்வாறான விண்கற்கள் இதுவரையிலும் குறைந்த அளவே சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அபோபிஸ் என்ற இராட்சத விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் கடந்த 2004ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விண்கலம் 2029ஆம் ஆண்டில் பூமியை தாக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விண்கல் பூமியை தாக்காது, வரும் வழியில் புவி ஈர்ப்பு வட்டத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாகி விடும் என்றும் தெரிவிக்கின்றனர்.

கதறக் கதற குழந்தையைத் தாக்கும் தமிழர்! இவன் ஒரு பேயா/ பிசாசா?

கதறக் கதற குழந்தையைத் தாக்கும் தமிழர்! இவன் ஒரு பேயா/ பிசாசா?


32 வயதான வளர்ந்த மனிதர் ஒருவர் குழந்தையைப் போட்டு சகட்டு மேனிக்கு அடிக்கும் அதிர்ச்சிக் காணொளி ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. சின்னக் குழந்தையைப் போட்டு அடிக்கும் குறித்த காணொளியானது பலரையும் அதிர்ச்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அடித்த நபருக்கு 32 வயது ஆகின்றது.
குழந்தையைப் போட்டு அடித்ததை வீடியோ பதிவு பண்ணியது மாத்திரம் இல்லாமல் அதனை மாத்திரம் பேஸ்புக்கிலும் தரவேற்றியுள்ளார். குறித்த வீடியோவை ஏராளமான மக்கள் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர். இப்போது பொலிசாரிடம் மாட்டியுள்ளான் குறித்த கொலைகாரன்.
இவர் குறித்த காட்சிகளில் தமிழில் தான் பேசுகிறார். இவன் ஒரு மிருகமா? இல்லை பிசாசா?
வாசகர்களே கீழே உள்ள வீடியோவைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்…